Thursday, July 2, 2009

நட்பு

கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நீ இருந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்லும் உன் நினைவுகள் தான் நம் நட்புக்கு இன்னும் உயிர் கொடுத்து கொண்டே இருக்கிறது.

நான் சிரிக்காமல் கழித்த தருணங்கள்
நான் ரசிக்காமல் போன செய்கைகள்
நான் பேசாமல் விட்ட வார்த்தைகள்
நான் கவலையாக நினைத்த கடமைகள்
இவை எல்லாம் சந்தோசமாக துளிர்கின்றன உன்னுடன் நட்பை இருக்கும் போது

நான் யாரிடமும் தோற்றதில்லை நேற்று வரை..
இன்றோ தோழமைக்காய் தோற்கிறேன் உன்னிடம்

பலனை எதிர்பார்த்து பாசம் பொழிகையில்
பாசத்தையே பலனாய் எதிர்பார்த்த நம் நட்பு.

இன்னொரு முறை நாம் பிறக்காவிட்டாலும் நம் இதயங்களை நட்பு காற்றில்
சுவாசிக்க விட செய்யும் நம் அன்பின் சுக பிரசவங்களுக்காய் நான் இறைவனை வேண்டுகிறேன்.