
Tuesday, August 18, 2009
Life

Thursday, August 13, 2009
கிருஷ்ணா
பிறந்த நாள் பரிசு
இந்த பிறந்த நாளை என்னால மறக்கவே முடியாது.....
முதன் முதலா விடுதியில் கொண்டாடும் முதல் பிறந்த நாள்......
எனக்கு பிரெண்ட்ஸ் ஜாஸ்தி.....எல்லாரும் சேர்ந்து எனக்கு கேக் வாங்கி அத கட் பண்ண வச்சு என் உயிரை வாங்கிடாங்க......
அவங்க எனக்காக என்ன கொஞ்சம் ஓட்டிஒரு கவிதை ங்கறபேர்ல ஒன்னு எழுதி கொடுத்தாங்க...அவங்களுக்காக அவங்கள நியாபகம் படுத்தி அந்த கவிதை யா ப்லோக் ல போடலாம்னு முடிவு பணிருகேன்......
எல்லாருக்கும் ரெம்ப நன்றி,
சக்தி,
உனக்கு பிடிச்ச கார்டூன் ட்வீட்டி,
அதை ரசிக்கிற நீ ஒரு ஸ்வீட்டி!
நீ விரும்பி போகிற இடம் இஷ்கான்,
அங்கே போகலேன்னா உன் மனசு ஆகிடும் நமத்து போன பாப்கான்!
கிருஷ்ணர் வைல தெரிஞ்சது உலகம்,
ஆனா உனக்கு அந்த கிருஷ்ணர் தான் உலகம்!
நீ அடிக்கடி சொல்லும் வார்த்தை கிருஷ்ணா
அவருக்கு நீ என்ன ஃபேனா!
நீ அடிக்கடி கொடுப்பது அட்வைசு,
அதுக்கு பயந்து ஓடுவது பல மனசு!
டென்டுல்கர் அடிப்பது சென்சுரி,
எங்களுக்கு நீ செஞ்சு தர்றதா சொன்னது கோபி மஞ்ஜூரி!
சினிமாவுக்கு கெடச்சது வைரமுத்து,
ஆனா உங்க ஸ்கூலுக்கு நீ ஒரு கவிமுத்து!
நீ அடிக்கடி பிடிப்பது ஆவி,
உன்னால கஷ்டப்படுவதோ ஒரு அப்பாவி!
மதுரைக்கு ஃபேமஸ் மல்லி,
ப்ரோக்ராம்ல நீ ஒரு கில்லி!
உனக்கு பிடிச்சது சப்போட்டா,
எப்பவும் நாங்க இருப்போம் உனக்கு சப்போட்டா!
நட்புடன்,
அனு,ப்ரின்சி,சத்யா,வித்யா மற்றும் புவனா.......
:) ரெம்ப ரெம்ப நன்றி தோழிகளே......
எனக்காக என் பிறந்த நாள் பார்ட்டில கலந்து கிட்ட சக்தி பிரியன்,ரெங்க நாதன்,ராஜேஷ்,குணா,அச்யுட்,பூர்ணிமா,ஹரிணி,வித்யா எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுருக்கேன்......தேங்க்ஸ் எ லாட் மை பிரண்ட்ஸ்......
Thursday, July 2, 2009
நட்பு
நான் சிரிக்காமல் கழித்த தருணங்கள்
நான் ரசிக்காமல் போன செய்கைகள்
நான் பேசாமல் விட்ட வார்த்தைகள்
நான் கவலையாக நினைத்த கடமைகள்
இவை எல்லாம் சந்தோசமாக துளிர்கின்றன உன்னுடன் நட்பை இருக்கும் போது
நான் யாரிடமும் தோற்றதில்லை நேற்று வரை..
இன்றோ தோழமைக்காய் தோற்கிறேன் உன்னிடம்
பலனை எதிர்பார்த்து பாசம் பொழிகையில்
பாசத்தையே பலனாய் எதிர்பார்த்த நம் நட்பு.
இன்னொரு முறை நாம் பிறக்காவிட்டாலும் நம் இதயங்களை நட்பு காற்றில்
சுவாசிக்க விட செய்யும் நம் அன்பின் சுக பிரசவங்களுக்காய் நான் இறைவனை வேண்டுகிறேன்.
Thursday, May 21, 2009
Friday, November 7, 2008
வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தரணியில் பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
............................................................................................
உலகமே இதற்கு மாற வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் இதை முதலில் நினைக்க வேண்டும்........
Thursday, November 6, 2008
School
எங்களிடையே தோன்றிய அர்த்தமற்ற சண்டைகளை நியாபகப்படுத்தும் பள்ளி.....
நாங்கள் இசைத்த மகிழ்ச்சி ராகங்கள் தான் எத்தனை எத்தனை..என்றும் எங்கள் மனதில் பாய காரணமான பள்ளி..
ஒன்றும் தெரியாத எங்களை அறிவாளி ஆக்கியதும்,
கவியாளன் ஆக்கியதும்,பாடகன் ஆக்கியதும்,பேச்சாளன் ஆக்கியதும் இந்த பள்ளி தான்...
நட்சத்திர குவியலோடு எங்களது கற்பனையும் மன குவியலோடு நாங்களும் விளையாடி மழிந்ததைதான் மறக்க முடியுமா?
என் மன கண்ணாடியில் என்றும் எனது இந்த பள்ளி மற்றும் குருவின் முகம்....
என் அக கண்ணாடியில் உள்ள பிரிவு என்று நான் பிரிந்த எனது பள்ளி வாழ்க்கை என்னும் விரிசலை எவ்வாறு சரி செய்ய?
எனது பள்ளி பிரிவை நினைத்து கண்களில் நீர் வழிந்தாலும்
வெற்றி என்னும் இதழ் பூக்கள் பூக்க புன்னகை மகரந்தத்தை தூவி விட்டு தான் நாங்கள் எல்லாரும் எங்கள் பள்ளியை பிரிந்து வந்தோம்...
எங்கள் மனசுவடுகளில் என்றும் அழியாமல் பதிந்திருக்கும் மங்கயர்கரசியின் நினைவுகள்...............................






