Saturday, September 26, 2009

வாழ்க்கை !

நம்மை வாழ்க்கை அலைக்கழித்த போதும்,

வாழ்ந்து வாழ்ந்து பூர்த்தி செய்கின்றோம்…

எல்லாமே மாறிவிடும் என்று தெரிந்தும்

ஒவ்வொன்றையும் அடைய நினைக்கின்றோம்…

இந்த வாழ்க்கையின் முடிவு தான்

என்னவென்று யோசித்துப் பார்த்தால்,

முடிவற்ற ஒரு இருளின் நடுவே

ஒளி(ர்)ந்து சிரிக்கிறது வாழ்க்கை !

Monday, September 14, 2009

சொல்லாத சோகங்கள்

செல்லமாய் , கொஞ்சி வளர்க்கும்,

வீட்டு நாய் குட்டிக்கும் இருக்கும்...

தாயை பிரிந்த பெருஞ்சோகம்!

தன்னில் உயிர்த்திருந்த தன் மகனின் மன நாளில்,

சொல்லத் தெரியாமல் வந்தெழும்

தாயின் நெஞ்சுக்குழியில்

ஏதோவொரு வெறும் சோகம்!

தண்டவாளத்து ரெயில் சத்தம்,

எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும்...

யாரோ,யாரையோ

பிரியுமொரு சோகம்!

தன் பெயர் கொண்ட முதல் குழந்தையுடன்

அவளைக் காணும் போதெல்லாம் அவனுக்கும்

தொண்டைக் குழியை வந்திருக்கும்

தொற்று போன காதலின் சோகம்!!